AR Rahman Got National Award [file image]
சென்னை : கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை தற்போது அறிவித்துள்ளனர். அதன்படி சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்க்காக தேசிய விருது கிடைத்துள்ளது.
இயக்குனர் மணி ரத்னம் டைரெக்க்ஷனில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், சரத்குமார் போன்றவர்கள் நடித்து பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. பெரும் எதிர்ப்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு கலெக்ஷனை பெற்றது.
மேலும், இந்த படம் நல்ல ஒரு வரவேற்பை பெறுவதற்கும், பிரமாண்டமான காட்சிகளை திரையில் கண்ட போது அதற்கு உயிர் மூச்சாய் அமைந்தது இந்த படத்தின் பாடல்களும், குறிப்பாக ரஹ்மானின் பின்னணி இசையும் தான். இந்த படம் வெளியான போதே ரசிகர்கள் அவருக்கு தேசிய விருது கட்டாயமாக கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி வந்தார்கள். அந்த அளவிற்கு அவரது இசை இந்த படத்திற்கு தூணாக அமைந்திருக்கும்.
தற்போது, 70-வது தேசிய திரைப்படங்களுக்கான விருதுகளில் இசைப்புயல் ‘ஏ.ஆர்.ரஹ்மானுக்கு’ பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்ததற்காக தேசிய விருதென்பது கிடைத்துள்ளது. மேலும், இது அவரது 7-வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…