Categories: சினிமா

Mella Thirandhathu Kadhavu :கண்கலங்க வைத்த காதல் கதை! மெல்லத் திறந்தது கதவு படம் உருவானது எப்படி?

Published by
பால முருகன்

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1986-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் ‘மெல்லத் திறந்தது கதவு’.  இந்த படம் அந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்தது. அந்த அளவிற்கு காதல் கலந்த செண்டிமெண்ட் திரைப்படமாக இந்த படத்தை இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார்.

படத்தின் கதைப்படி, சுப்ரமணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ராதாவுடன் சிறிய வயதில் இருந்தே நண்பராக பழகி வந்துள்ளார். பிறகு, சுப்ரமணி நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய தனது கல்லூரி ஆய்வறிக்கைக்காக தனது குடும்பத்துடன் ஊருக்குப் செல்கிறார். சுப்ரமணி  நண்பனாக பழகினாலும் துளசி மனதில் காதல் மலர்ந்தது.

பிறகு ஒரு கட்டத்தில் துளசியின் தந்தை மாரடைப்பால் இறந்துவிடுகிறார். சுப்ரமணியின் தந்தை துளசியுடன் சுப்ரமணிக்கு திருமணம் செய்து வைக்கும் போது, ​​அவர் மறுக்கிறார். இதன் விளைவாக, துளசியின் தாய் வேதனையில் இறந்துவிடுகிறாள். இதன்  பிறகு என்ன செய்வது என்றே தெரியாமல் துளசி தனது மாமா வீட்டிற்கு செல்கிறார். பின்னர், படத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக் வருகிறது, அதில் சுப்ரமணி தனது கல்லூரியில் படிக்கும் போது அமலாவாக நடித்துள்ள நூர்ஜஹானை காதலிக்கிறார்.

கல்லூரிக்கு நூர்ஜஹான் முக்காடு போட்டு வருவதால், சுப்ரமணி அவள் முகத்தை பார்க்கவில்லை. அவர்கள் சந்திக்கத் திட்டமிட்டிருந்த ஒரு நாளில், நூர்ஜஹான் தற்செயலாக புதைமணலில் இறங்கி இறந்துவிடுகிறார். இதனை பார்த்த பார்த்த சுப்ரமணி வேதனையில் அழுவார். அதில் மோகன் நடிப்பை பார்த்தோம் என்றால் நமக்கே கண்களில் இருந்து கண்ணீர் வரும். அந்த அளவிற்கு நிஜமாகவே நடித்திருப்பார்.

நூர்ஜஹான் இறந்த அதே புதைமணலில் துளசி தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறாள், சுப்ரமணி அவளை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் துளசியின் உண்மையான அன்பைப் புரிந்து கொண்ட சுப்ரமணி விரைந்து வந்து துளசியைக் காப்பாறுவர் இது தான் படத்தின் கதை. படத்தில் வரும் காதல் காட்சிகள் அனைத்தும் கண்கலங்க வைக்கும் வகையில் இருக்கும் என்றே சொல்லலாம்.

அந்த காட்சிகளுக்கு எல்லாம் உயிர் கொடுத்தது என்றால் படத்தின் பின்னணி இசை ஒரு காரணம். படத்தின் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இருப்பினும், பாடல் ட்யூன்களை விஸ்வநாதன் இசையமைத்தார் மற்றும் இசைக்குழு ஏற்பாடுகளை இளையராஜா செய்திருந்தார்.

படத்தில் இடம்பெற்ற “வா வெண்ணிலா”, “தில் தில் தில் மனதில்”, “ஊரு சனம் தூங்கிடிச்சு”, உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் இன்று வரை பலருடைய பேவரைட் பாடல்களாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கும் சில பிரச்சனைகள் வந்தது. குறிப்பாக , மதுரையில் உள்ள சினிப்ரியா திரையரங்கில் படம் வெளியானபோது , ​​ஒரு விநியோகஸ்தர் படத்தின் இரு பகுதிகளை மாற்றி படத்தை வெளியிட்டார்.

பிறகு இதனால் படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்ற காரணத்தால், இறுதியாக தமிழகம் முழுவதும் முதல் பாதியில் அமலா கதையையும், இரண்டாம் பாதியில் ராதா கதையையும் மாற்றி படம் வெளியிடபட்டது.  படத்தை மக்கள் ஏற்பார்களா இல்லையா என படக்குழு குழப்பத்தில் இருந்தனர். ஒரு வழியாக படம் மக்களுக்கு பிடித்து போக படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே, இந்த படத்தை பார்த்து ரசித்தவர்கள் அனைவரும் படம் பார்த்துவிட்டு தங்களுக்கு தோணுவதை கூறி நினைவு கூர்ந்து வருகிறார்கள். அந்த சமயமே நல்ல பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வசூலில் பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்து பிளாக் பஸ்டர் படமாக மாறியது. இனிமேல் இப்படி ஒரு திரைப்படம் வருமா என்பது சந்தேகம் தான்.

Published by
பால முருகன்

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

8 minutes ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

32 minutes ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

1 hour ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

2 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

2 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

2 hours ago