Categories: சினிமா

பறந்தது இளம் காதலி…பப்லுவை பிரிந்த ஷீத்தல்? திடீரென என்னாச்சு? வெளியான திடுக்கிடும் தகவல்.!

Published by
கெளதம்

முதல் மனைவியை பிரிந்த நடிகர் பப்லூ பிரித்விராஜ், ஷீத்தல் என்ற 23 வயது பெண்னை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த இளம் பெண்ணுக்கும் இருவருக்கும் கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர். இப்பொது இவர்களும் பிரிந்து விட்டதாக ஒரு வதந்தி தீயாக பரவி வருகிறது.

நடிகர் பப்லூ பிரித்விராஜ், 1971 ஆம் ஆண்டு ‘நான்கு சுவர்கள்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1980கள் முதல் 2000கள் காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் முன்னணி நடிகராகவும், துணை நடிகர் மற்றும் வில்லன் என ஒரு கலக்கு கலக்கினார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான இவர் ஜோடி நம்பர் ஒன் உட்பட பல பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் 1994-ம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஹத் என்ற மகன் உள்ளார். இருப்பினும், சமரசம் செய்ய முடியாத சில கருத்து வேறுபாடு காரணமாக, அவரது  முதல் மனைவியான பீனாவிடம் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திராவை சேர்ந்த ஷீத்தல் என்ற 24 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று கிசுகிசுக்கப்பட்டது. பின்னர், 57 வயதானநடிகர் பப்லூ, விஜே பார்வதியுடன் ஒரு நேர்காணலின் போது, ஜிம்மில் தனது தனிப்பட்ட பயிற்சியாளரான ஷீத்தல் என்பவரை சந்தித்துள்ளாராம்.

அப்போது, ஒருவரையொருவர் சந்தித்த கொண்ட அவர்கள் இருவருக்கும் இடையே நாளடைவில் காதல் மலர தொடங்கியதாகவும், இப்பொது திருமணம் செய்துகொள்ளவில்லை, லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக கூறினார்.

ஓயாத மன்சூர் அலிகான் விவகாரம்…நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்.!

ஆனால், சமீப காலமாக அவர்கள் இருவரும் ஒன்றாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஒன்றாக பங்கேற்கவில்லை. அடிக்கடி இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடுவது உண்டு. ஆனால் சில நாட்களாகவே வெளியாகவில்லை. அதுபோல், முன்னதாக இருவரும் இயக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து இருவருமே நீக்கியுள்னர். இதனையடுத்து இவர்கள் இருவரும் இப்பொது உறவில் இல்லை என்றும், பேசிக்கொள்ளவில்லை என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்ப தொடங்கினர்.

ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!

அந்த வகையில், சமூக வலைத்தளத்தில் ஷீத்தலிடம் ஒரு ரசிகர் நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீங்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஷீத்தல் லைக்  செய்துள்ளார்.  இதனை வைத்து பப்லு – ஷீத்தல் இருவரும் பிரிந்ததாக ஒரு வதந்தி பரவ ஆரம்பித்தது. அது மட்டும் இல்லாமல், ஷீத்தல் இல்லாமல் கொண்டாடிய தனது பிறந்தநாள் வீடியோவை பப்லூ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இப்போது, சில மனக்கசப்பு காரணமாக உண்மையிலேயே இருவரும் பிரிந்து விட்டனரா? அல்லது இருவர் குறித்து இணையத்தில் பரவும் செய்திகள் வரும் வதந்திகளா? என்ற கேள்விகளுக்கு விரைவில் அவர்கள் இருவரும் சரியான விளக்கம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

39 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago