நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், இயற்கை வளத்தின் மீது அக்கறை கொண்டவராக வளம் வருகிறார்.
இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடும்படி வலியுறுத்தி வருகிறார். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நடிகர் விவேக் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், பிள்ளையார் சதுர்த்தி வருகிறது. வர்ணம்( ரசாயனம்) பூசாத சிலைகள் வாங்கி வழிபடுவோம். பின்னர் நீர்நிலைகளில் கரைக்கும் போது மண், மண்ணுடன் சேர்ந்து, இயற்கையின் இயல்பு பாதுகாக்கப்படும். கணேசர் அறிவார் நம் மனத்தை, காப்போம் கடல் வாழ் உயிரினத்தை என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…