அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்! என்ன தெரியுமா?

Published by
பால முருகன்

Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்ளின் மூலம் தெரிவித்து வருகிறார்கள். அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் எல்லா பக்கமும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இதனையடுத்து, நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளதாக தெரிகிறது. பிறந்த நாள் அன்று அஜித்திற்கு மிகவும் பிடித்த விஷயத்தை ஷாலினி பரிசாகவும் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அஜித்திற்கு நடிப்பதை தாண்டி பைக்கில் ரைடு போவது ரொம்பவே பிடித்த விஷயம்.

பைக் என்றாலே அஜித் ஒரு குழந்தை போல மாறிவிடுவார் என பல பிரபலங்கள் கூறி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். அதைபோலவே அஜித் பைக் ரைடு செல்லும்போதும் கூட நாம் அதனை பார்த்து இருக்கிறோம். இந்நிலையில், அஜித்தின் பிறந்த நாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அளிக்கும் விதமாக ஷாலினி டுகாட்டி மாடல் பைக் ஒன்றை கொடுத்துள்ளார்.

அஜித்திற்கு ஷாலினி கொடுத்துள்ள அந்த பைக் DUCATI MULTISTRADA V4. இதை பைக் விலை இந்தியாவில் கிட்டத்தட்ட 23 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அஜித்திற்கு அவர் கிப்ட் -ஆக கொடுத்துள்ள அந்த பைக்கின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ShaliniAjithKumar gifted a Dukati bike to AK on his birthday special [file image]

நடிகர் அஜித்குமார் முன்னணி நடிகராக வளர்த்துக்கொண்டு இருந்த சமயத்திலே ஷாலினியை காதலித்தார். குறிப்பாக அமர்க்களம் படத்தில் இருவரும் இணைந்து ஒன்றாக நடித்து இருந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அனுஷ்கா குமார் என்ற மகளும், ஆத்விக் அஜித் என்ற மகனும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

16 minutes ago

‘ஈரானில் 6 விமான நிலையங்கள், 15 ராணுவ விமானங்கள் சேதம்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…

34 minutes ago

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…

1 hour ago

போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை.!

சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…

1 hour ago

”அண்ணா குறித்து விமர்சனம்.. பாஜகவிடம் அடகுவைக்கப்பட்ட அதிமுக” – சேகர்பாபு கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…

1 hour ago

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

2 hours ago