தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் அல்லு அர்ஜுன். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர் இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.
மேலும் ட்வீட்டரில் இவரது ரசிகர்கள் #HBDALLUARJUN என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
படத்திலிருந்து வெளியான பாடல்களும் படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படம் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளதாம். இதனால் தற்போது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…