Categories: சினிமா

Anirudh: இனிமேல் 2 வருஷத்துக்கு அனிருத்தை கையில் பிடிக்கவே முடியாது! மொத்த லிஸ்ட்டும் இங்கே தான்…

Published by
கெளதம்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான அனிருத், அடுத்த 2 வருடங்களுக்கு ரொம்ப பிஸியாகிவிடுவார் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய இசையமைப்பாளர் யார் என்றால், அது அனிருத் என்று கூறலாம். சமீபகாலமாக வெளியான பல பெரிய படங்களுக்கு அவர்தான் இசையமைத்திருந்தார்.

அதுபோல, இன்னும் வெளியாகவுள்ள பல பெரிய படங்களுக்கும் அவர்தான் இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் அனிருத் ஒரு படத்திற்கு இசையமைத்தாலே அந்த படத்தில் உள்ள பாடல்களும், பின்னணி இசையும் பெரிதளவில் பேசப்பட்டு விடும் என்பது போலவே மாறிவிட்டது.

அந்த அளவிற்கு ஒரு படத்திற்கு தரமான பின்னணி இசையையும், சூப்பரான பாடல்களையும் கொடுத்து மக்களை சந்தோஷத்தில் வைத்து வருகிறார். அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்களும் பெரிதளவில் பேசப்பட்டு வெற்றியடைந்து விடுகிறது.

குறிப்பாக கடைசியாக இவரது இசையில் வெளியான விக்ரம், ஜெயிலர், ஜவான் ஆகிய படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் முக்கிய காரணம். இந்நிலையில், அனிருத் தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இப்பொது, விஜய்யின் லியோ படத்திலும் கமலின் இந்தியன் 2 படத்திலும் இசையமைத்த வரும் அனிருத்தின் கையிருப்பில், ரஜினியின் 170 மற்றும் 171 ஆவது படம், அஜித்தின் விடாமுயற்சி, தெலுங்கில் ஜூனியர் NTR-ன் தேவாரா, விஜய் தேவரகொண்டாவின் 12வது படம் மற்றும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி என அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைக்க அனிருத் முன்பதிவு செய்யப்பட்டுள்ளாராம்.

Published by
கெளதம்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

12 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

12 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

13 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

13 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

14 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

15 hours ago