RailinOligal [file image]
நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் இன்று (செப்டம்பர் 13) திருநெல்வேலியில் இருவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது, எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகியோர் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘புளூ ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் பிருத்வி பாண்டியராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், படத்தின் முன்னணி ஜோடிகளின் திருமண நாளை முன்னிட்டு, அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து, படத்தின் முதல் பாடலான ‘ரயிலின் ஒலிகள்’ என்ற காதல் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க, ரெயிலின் ஒலிகளை பிரதீப் குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர். பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோ அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் கதாபாத்திரங்களையும் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் கதையை காட்சியாக காட்டப்பட்டுள்ளது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…