பீஸ்ட் பட ஷூட்டில் விஜய் பட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. அதனை குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு, பின்னர் சென்னையில் செட் அமைத்து ஷூட்டிங் எடுத்து வந்தனர்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. அதனை நேற்று நாயகி பூஜா ஹெக்டே விடியோவாக வெளியிட்டு இருந்தார். அதில், பட ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்.
இன்று புதிய புகைப்படத்தை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது தளபதி விஜயின் காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டு விட்டதாம்.
அதனை குறிப்பிட்டு அவரும் இயக்குனர் நெல்சனும் கட்டிபிடித்து தங்கள் அன்பை பகிர்ந்த வண்ணம் ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் முகம் தெரியவில்லை. இயக்குனர் நெல்சன் முகம் மட்டும் தெரிந்தது. இருந்தாலும் அந்த புகைப்படம் தளபதி ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
இந்த போட்டோ பதிவிட்டு, இன்றுடன் விஜயின் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. இனி படத்தின் பேட்ச் ஒர்க் எனப்படும் சிறு சிறு காட்சிகள் எடுத்து முடித்துவிட்டு, அடுத்துஎடிட்டிங், பாடல் கம்போசிங் என ரிலீசுக்கு பட்டை தீட்டும் வேலையில் இயக்குனர் நெல்சன் ஈடுபட உள்ளார். இனி அடுத்தடுத்த அப்டேட்களை சன் பிக்ச்சர்ஸிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…