Bigg Boss Tamil Season 7 [file image]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இன்று 5-வது நாள் ஆகி இருக்கும் நிலையில் மெல்ல மெல்ல சண்டை வெடிக்க தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் பிரதீப் எல்லாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், விஷ்ணு தற்போது அடிக்கடி பலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, விஷ்ணு கடந்த சில நாட்களாகவே மாயாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவரை தொடர்ந்து தற்போது விஷ்ணுவுக்கும் பிக் பாஸ் கேப்டனாக இருக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்கு வாதம் நடந்த முழு காட்சி இன்றய எபிசோடில் தான் தெரிய வரும்.
இன்றய நாளுக்கான ப்ரோமோவில் அவர்கள் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அந்த ப்ரோமோவில் ” கேப்டனாக இருக்கும் விஜய் என் மீது பிரதீப் ஷூவை வைத்து என் மீது மோதிகொண்டு சென்றார். எனக்கு ஒரு சமயம் திடீரென கோபம் வந்துவிடும் அப்படி கோபம் வந்தால் என்னுடைய கையை தூக்கி அவருடைய முகத்தில் அடிப்பது போல கையை தூக்கி விடுவேன்.
பிறகு மூக்கு உடைந்து விடும் என் மீது மிகவும் பாசமான பசங்கள் எல்லாம் வெளியிலே இருக்கிறார்கள் எனவே, நீங்கள் இப்படி செய்து விட்டு வெளியே சென்றீர்கள் என்றால் அவ்வளவுதான் என்று விஜய் கூறியிருந்தார். அதற்கு பவா செல்லத்துரை விஜய் இப்படி சொன்னது சரிதான் என்று யாராவது சொல்ல சொல்லுங்கள் என்று கேட்கிறார்.
அதன் பின் எழுந்த விஷ்ணு நான் இப்போது உங்கள் மீது செருப்பை வைத்து தட்டுகிறேன் நீ முடிந்தால் என்னை அடி பார்ப்போம் என்று கூறுகிறார். அதற்கு விஜய் நீ முதலில் செருப்பால் தட்டு நான் அடிக்கிறேன் என்று கூறுகிறார். இந்த அதிரடி ப்ரோமோ இன்று நடைபெறவுள்ள எபிசோடின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிக மாகியுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…