Vijayakanth [File Image]
Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பல பிரபலங்களும் தன்னால் முடிந்த அளவிற்கு பண உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். அவர் செய்த உதவிகளை பற்றி பல பிரபலங்களும் நெகிழ்ச்சியுடன் பல பேட்டிகளில் கூறி நீங்களே பார்த்து இருப்பீர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில் விஜயகாந்துடன் நடித்த நடிகை சாந்தி தனக்கு விஜயகாந்த் சம்பளத்தை தாண்டி பணம் கொடுத்ததாக கூறி இருந்தார்.
அவரைத் தொடர்ந்து லிவிங்ஸ்டன் நடிகர் விஜயகாந்த் தனக்கு மூட்டை மூட்டையாக பணம் கொடுத்த தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய லிவிங்ஸ்டன் கேப்டன் விஜயகாந்த் போல ஒரு நல்ல மனிதரை நாம் பார்க்கவே முடியாது. ஏனென்றால் ஒரு முறை நான் அவருடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
அந்த படத்தில் எனக்கு சம்பளமாக 4 லட்சம் ரூபாய் பேசப்பட்டது. அந்த 4 லட்சத்தை சம்பளமாக வாங்கும் போது இந்த பணம் எனக்கு 100 ரூபாய் தாள் -ஆக கிடைக்குமா என்று விஜயகாந்த்திடம் கேட்டேன். எதற்கு 100 ரூபாய் தாளாக கேட்கிறாய் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் என் அம்மாவிடம் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருவேன் என்று கூறினேன்.
எனவே 100 ரூபாய் தாள்களாக இருந்தால் அந்த காசுகளை என்னுடைய அம்மா முன்னாடி மூட்டை மூட்டையாக கொட்ட ஆசைப்படுகிறேன். எனவே எனக்கு இந்த உதவி செய்யுங்கள் என்று கேட்டிருந்தேன். உடனடியாக வங்கியில் போய் 5 லட்சம் ரூபாய் பணத்தை 100 ரூபாய் தாள்களாக மூட்டைகளில் கட்டி வங்கியில் இருந்து வாங்கி வந்து எனக்கு உதவி செய்தார்.
அது மட்டுமில்லாமல் ராவுத்தர் உடைய ஆட்டோ ஒன்றையும் கொடுத்து அவ்வளவு பணத்தையும் மூட்டையாக கட்டி வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தார். என்னுடைய வீட்டிற்கு சென்று நான் என்னுடைய அம்மாவிடம் காண்பித்தேன் என்னுடைய அம்மா மிகவும் சந்தோஷப்பட்டார்.எனக்கு சம்பளம் 4 லட்சம் தான் ஆனால் 1 லட்சம் அதிகமாகவே இருந்தது என்னால் நினைத்து கூட பார்க்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு திடீரென விஜயகாந்த் எனக்கு இப்படி உதவி செய்தது மிகவும் மறக்க முடியாத ஒரு விஷயம்’ எனவும் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…