Rajinikanth in Pondicherry [Image source : file image]
ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால்சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது ரஜினி புதுச்சேரியில் இருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் உடனடியாக ரஜினி இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் கூட்டமாக வந்ததை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய காரில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையை அசைத்து உற்சாகப்படுத்தினார். மக்கள் கூட்டமாக கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பிறகு, போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…