priya bhavani shankar [Image source : file image ]
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் அடிக்கடி தனக்கு தோன்றுவது மற்றும் தன்னிடம் கேட்கும் எந்த மாதிரி கேள்விகளுக்கும் வெளிப்படையாகவே பதில் அளித்துவிடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனது காதலுருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
இது குறித்து பேசிய பிரியா பவானி சங்கர்”நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தேன். அப்போதுதான் எனக்கும் எனது காதலருக்கும் காதல் தொடங்கியது. ஹாஸ்டலில் தங்கி இருந்த காலகட்டத்தில் அங்கு இருப்பவர்களுக்கு வார இறுதியில் இரண்டு மணி நேரம் மட்டுமே வெளியே செல்வதற்கு அனுமதி உண்டு.
எனவே, ஒருநாள் நானும் என் காதலரும் வெளியே செல்வதற்காக கிளம்பி இருந்தோம். அப்போது ஹாஸ்டலின் வார்டன் அவரைப் பார்த்து ஹெல்மெட்டை கழட்டுங்கள் என கூறினார். உடனடியாக அவரும் கழட்டிய உடன் என்னை பார்த்து வார்டன் என்னமா பையன் கூட போகிறாய்..? என கேட்டார். அப்போது எனக்கு அந்த சூழ்நிலையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
பிறகு நான் இது என்னுடைய அவுட்டிங் டைம் நான் யார் கூட வேணாலும் போவேன் எங்க வேணாலும் போவேன். என்ன இப்போ பிரின்ஸ்பல் கிட்ட சொல்வீர்களா..? என்னுடைய வீட்டு நம்பர் தருகிறேன் என்னுடைய பெற்றோர்களிடம் சொல்கிறீர்காளா..? என கேட்டேன். அதற்கு வார்டன் அதிர்ந்துவிட்டார்” என பிரியா பவானி சங்கர் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலரின் புகைப்படத்தை வெளியீட்டு தனது காதலர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் கடைசியாக ரூத்ரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 , ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…