Categories: சினிமா

ரசிகர்களுடன் ‘லியோ’ FDFS கண்டுகளிக்கும் திரையுலக பிரபலங்கள்!

Published by
கெளதம்

பல்வேறு தடைகளை தாண்டி லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. பிற மாநிலங்களில் 4 மணிக்கு முதல் காட்சிகள் திரையிடபட்டது. ஆனால், தமிழகத்தில் 9 மணியளவில் லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படம் வெற்றிபெற நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், முதல் காட்சியை காண முக்கிய திரை பிரபலங்கள் பலரும் தியேட்டருக்கு வந்த வண்ணம் உள்ளார்கள். அந்த வகையில், சென்னையில் உள்ள வெற்றி திரையிரங்கில் அனிருத், லோகேஷ் ஆகிய இருவரும் ரசிர்கர்களுடன் அமர்ந்து ஒன்றாக படம் பார்த்தனர்.

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ், லியோ திரைப்படத்தை காண குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கு வந்துள்ளார். அவருடன் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் வந்திருந்தார். அவர்களை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமாகி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதேபோல், முக்கிய இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ், சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் லியோ படத்தின் முதல் காட்சியை கண்டுகளித்தார்.

LEO Review : பரபர ஆக்சன்… பக்கா மாஸ்.! தளபதி விஜயின் லியோ எப்படி இருக்கு.?

குறிப்பாக, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் மன்சூர் அலிகானும் சென்னை கமலா திரையரங்கில் லியோ முதல் காட்சியை பார்க்க வருகை தந்துள்ளார். தற்போது, படத்தின் முதல் பாதி முடிந்திருக்கும் நிலையில், பாசிடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

Leo FDFS: லியோவில் காதலுக்கு மரியாதை!! திரைக்கு முன்பு நடைபெற்ற திருமணம் நிச்சயம்!

லியோ

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புக்கு வெளியாகியுள்ள இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago