Bigg Boss- Cool Suresh [file image]
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வழியாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கூல் சுரேஷ், கடந்த சீசனை தொடக்கத்தில் ஜி.பி முத்து எவ்வாறு ஜாலியாக வைத்திருந்தாரோ அதேபோல் இந்த சீசனையும் நம்ம கூல் சுரேஷ் தான் ஜாலியாக வைத்திருக்கிறார்.
இதுவரை யாரிடமும் சண்டை போடாமல், எந்தவித சர்ச்சையில் சிக்காமலும் கூலாக விளையாடி கொண்டிருக்கும் கூல் சுரேஷ், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இரண்டே நாள் தான் ஆகிறது. அதற்குள் தனது வீட்டின் நியாபகம் வந்துவிட்டதா என்னவோ தெரியவில்லை.
இன்று காலை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கேமரா முன் நின்று கொண்டு தனது குழந்தைகளுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, சீக்கிரம் கிளம்பி ஸ்கூலுக்கு செல்லவும், அம்மா எது செய்து கொடுத்தாலும் அதனை சமத்தா சாப்பிட்டுவிட்டு போகணும் என்று கூறினார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ், இந்த வீட்டில் நம்மள சும்மா சமைக்க சொல்லிட்டு பிறகு ஹோட்டலில் இருந்து வரும் நல்ல சாப்பிடுவாங்க போல, அப்பிடின்னு சொன்னங்க. நானும் அப்படி தான் நினைச்சிட்டு இருந்தேன். அதெல்லாம் முற்றிலும் பொய், நாங்க தான் சமைத்து சாப்பிட்டு இருக்கோம்.
அதனால், கண்ணால் காண்பது பொய் , காதல் கேட்பதும் பொய் தீரா விசாரிப்பதை மெய் என்று கூறியதோடு, இத நான் எதுக்கு சொல்கிறேன் என்றால், நம்ம வீட்டில் சாப்பாடு நல்லா இல்லை என்றால், அம்மா – மனைவியிடம் குறை சொல்கிறோம். இப்போ தான் தெரியுது சமைத்து சாப்பிடுவது எவ்வளவு கஷ்டம் என்று.
அதனால என் குழந்தைகளை இருப்பதை சாப்பிட்டுவிட்டு ஸ்கூலுக்கு போங்க. அம்மாகிட்ட சண்டை போடாதீங்க. உங்களுக்காக தான் அப்பாஇங்கே கஷ்டப்பட்டு இருக்கேன், அதற்கு தானே அப்பா கஷ்டப்படுகிறோம் என்று உருக்கமாக அறிவுரை கூறினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…