Cook With Comali[file image]
Cook With Comali : தனியார் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான ‘குக்கு வித் கோமாளி’ நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கியது.
கடந்த 4 சீசன்களாக வெற்றிகரமாக பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் ‘குக் வித் கோமாளி’. சமையலை மையமாக கொண்ட இந்த நிகழ்ச்சி இடை இடையில் நகைச்சுவை கலந்து இந்த நிகழ்ச்சி இருப்பதால் மக்களிடையே தனி வரவேற்பை பெற்று பெற்றி அடைந்தது.
இந்த நிகழ்ச்சிக்கெனவே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது என்றே கூறலாம். அதிலும் சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்ப்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சிக்கு அடிமை என்றும் கூறலாம். தற்போது இந்த வெற்றிகரமான நிகழ்ச்சியின் 5-தாவது சீசன் நேற்றைய நாள் (ஏப்ரல்-27) மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் இரவு 9.30 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கியது.
இதில் நடுவராக செஃப் தாமோதரன் இந்த 5-தாவது சீசனிலும் தொடர்கிறார். அதே போல் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக, செஃப் தாமோதரனுடன் களமிறங்கி இருக்கிறார். அதே போல இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், குரேஷி, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக ரக்ஷனும், மணிமேகலையும் இடம் பெற்றுள்ளனர். அதே நேரம் சுஜிதா, பிரியங்கா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், அக்ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த சீசனில் குக்குகளாக களமிறங்கி உள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…