சினிமா

நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்? ‘Y+’ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிர அரசு!

Published by
பால முருகன்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜவான்’ மற்றும் ‘பதான்’ ஆகிய திரைப்படங்கள் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி உள்ளது. ஒரே ஆண்டில் ஒரு நடிகரின் 2 படங்கள் வெளியாகி இரண்டு படமும் 1,000 கோடி வசூல் செய்த சாதனையையும் அவர் படைத்தது இருக்கிறார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா போலீசாருக்கு வந்த தகவலின் படி ஷாருக்கானுக்கு  கொலைமிரட்டல் வந்துள்ளதாம். ஜவான், பதான் வெற்றியால் அவருக்கு இந்த கொலைமிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து ஷாருக்கானின் பாதுகாப்பாக 3 போலீசார் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிர மாநில அரசு Y+ பாதுகாப்பு அவருக்கு வழங்கியுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக ஷாருக்கான் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு தற்போது  Y+ பாதுகாப்பு வழங்கி மகாராஷ்டிர மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த Y+ பாதுகாப்பு 24 மணி நேரமும்  ஷாருக்கான் வீட்டில் போலீஸார்  ஆயுதம் வைத்து கொண்டு இருப்பார்கள். கிட்டத்தட்ட 6 போலீசார் பாதுகாப்பிற்காக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த Y+ பாதுகாப்பிற்கு எவ்வளவு கட்டணமோ அதனை ஷாருக்கான் செலுத்துகிறார்.  மேலும்,ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு Y+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், டெல்லியை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர் கொடுத்துள்ள  கொலை மிரட்டல் காரணமாக அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

24 minutes ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

2 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

2 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

5 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

6 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

7 hours ago