Categories: சினிமா

கோபத்தில் தான் அந்த முடிவு எடுத்தேன்! இயக்குனர் அமீர் பேச்சு!

Published by
பால முருகன்

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட படங்களை இயக்கி தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்பதனை நிரூபித்துவிட்டார். அதே சமயம் யோகி, ஆதிபகவன், வடசென்னை, மாறன் ஆகிய படங்களில் நடித்து தான் ஒரு நல்ல நடிகர் என்பதனையும் காட்டிவிட்டார். இதில் அவர் வடசென்னை படத்தில் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம்.

இப்படி நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி கொண்டு இருக்கும் இயக்குனர் அமீர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் தான் நடிகனாக வேண்டும் என்று முடிவெடுத்தது கோபத்தில் எடுத்த முடிவு தான் என பேசியுள்ளார். இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் ” நான் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பயணிக்க திட்டமிட்டு இருக்கிறேன்.

ரொம்ப ஏமாந்துட்டேன்…துரோகம் செஞ்சிட்டாரு! ஷீத்தல் பற்றி எமோஷனாக பேசிய பப்லு!

அதில் முதன்மை நான் இயக்கத்திற்கு தான் கொடுப்பேன். எனக்குள் படங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் பெரிதாக எழுந்துகொண்டே தான் செல்கிறது. நான் நடிகர் ஆனது கோவத்துல எடுத்த முடிவு. நான் விருப்பப்பட்டு நடிக்கவேண்டும் என்று நான் நடிக்க ஆரம்பிக்கவில்லை. அதே சமயம் விருப்பப்பட்டு நான் செய்தது படங்களை இயக்குவது.

என்னுடைய மனதிற்குள் நான் இயக்குனராக ஆகவேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. இந்த சமூகத்தில் நடிகர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவம் என்னை நடிகனாக மாற்றியது மற்றபடி நடிகராக ஆக வேண்டும் என்பதில் எனக்கு எந்த வித ஈடுபாடும் இல்லை. ஆனால், அதனை நான் குறை எல்லாம் கூறவில்லை. என்னைப்பொறுத்தவை இயக்கம் முதலில் இரண்டாவது தான் நடிப்பு” எனவும் இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

மேலும், அமீர் தற்போது மாயவளை மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதே சமயம் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இறைவன் மிக பெரியவன் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 minutes ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

48 minutes ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

1 hour ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

4 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

4 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

5 hours ago