காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைப்பட தயரிப்பு நிறுவனமான பிவிபி, காசோலை மோசடி வழக்கில் பிரபல தமிழ் இயக்குனர் லிங்குசாமி மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிறை தண்டனை நிறுத்தி வைப்பு:
இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, பிவிபி நிறுவனத்தால் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய கோரியும், தடை விதிக்க கோரியும் திருப்பதி பிரதர்ஸ் மேல்முறையீடு செய்திருந்தனர். இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 20% தொகையை 6 வாரங்களில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தீர்ப்பு அளித்துள்ளனர்.
இயக்குநர் லிங்குசாமியின் செக் மோசடி:
கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்த நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம், பிவிபி கேபிடல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து “எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக ரூ.1.03 கோடி கடன் வாங்கியது. அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீதும் பிவிபி கேபிடல் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…