Categories: சினிமா

இயக்குனர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.!

Published by
கெளதம்

காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைப்பட தயரிப்பு நிறுவனமான பிவிபி, காசோலை மோசடி வழக்கில் பிரபல தமிழ் இயக்குனர் லிங்குசாமி மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு:

இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, பிவிபி நிறுவனத்தால் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய கோரியும், தடை விதிக்க கோரியும் திருப்பதி பிரதர்ஸ் மேல்முறையீடு செய்திருந்தனர். இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 20% தொகையை 6 வாரங்களில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தீர்ப்பு அளித்துள்ளனர்.

இயக்குநர் லிங்குசாமியின் செக் மோசடி:

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்த நிறுவனமான  திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம், பிவிபி கேபிடல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து “எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக ரூ.1.03 கோடி கடன் வாங்கியது. அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீதும் பிவிபி கேபிடல் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

Published by
கெளதம்

Recent Posts

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

16 minutes ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

53 minutes ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

1 hour ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

2 hours ago

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!

லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…

2 hours ago

”தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை அச்சுறுத்துகிறது” – முதல்வர் ஸ்டாலின் பதிவு.!

சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…

4 hours ago