சென்னை : மணிவண்ணன் தன்னை ஒரு முறை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
சினிமாவில் மறக்க முடியாத ஒரு பிரபலத்தில் மணிவண்ணன் ஒருவர் என்று கூறலாம். நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் 1980,90,2000 சமயத்தில் கலக்கியவர். காமெடியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதைப்போல குணசித்ர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திவிடுவார்.
அதைப்போலவே, மணிவண்ணன் அமைதி படை, 24 மணி நேரம், சின்ன தம்பி பெரிய தம்பி, என பல்வேறு படங்களையும் இயக்கி இயக்குனராகவும் பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இப்போது முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி கூட ஆரம்ப காலகட்டத்தில் மணிவண்ணனிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பிறகு தான் இயக்குனர் ஆனார்.
மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தபோது ஒரு முறை சுந்தர் சி அவரிடம் பயங்கரமாக கெட்டவார்த்தை போட்டு திட்டு வாங்கினாராம். உதவி இயக்குனராக பணியாற்றிய படத்தின் படப்பிடிப்பின் போது சாலையில் மாட்டு சாணி இருந்ததாம். அந்த சாணியை மணிவண்ணன் அங்கு இருந்து எடுங்கள் என்று கூறினாராம்.
அதற்கு சுந்தர் சி நம்மளை மணிவண்ணன் சொல்லவில்லை என்று மற்றவர்களிடம் இந்த சாணியை இங்கு இருந்து எடுங்கள் என்று உதவி இயக்குனர் போல பேசினாராம். இதனை பார்த்த மணிவண்ணன் ஏன் மற்றவர்களை சொல்கிறாய் நீ இங்கே தான இருக்கிறாய் நீ எடுக்கமாட்டியா? என்று கெட்டவார்த்தை போட்டு திட்டினாராம். இந்த தகவலை இயக்குனர் சுந்தர் சியே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுவரை மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் மற்றும் 50 படங்களை இயக்கியுள்ளார். இப்போது மணிவண்ணன் மண்ணில் இல்லை என்றாலும் கூட அவர் நடித்த படங்கள் எல்லாம் காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…