Director Manikandan [file image]
சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதில், சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்திற்கும் அதில் விவசாயியாக நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது என 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பலரையும் பாராட்ட செய்தது.
இந்நிலையில், கடைசி விவசாயி திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றதை அடுத்து, இயக்குனர் ம.மணிகண்டன் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். தில், கடைசி விவசாயி படத்தில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, கதாபாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டிக்கும், ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், சிறப்பாக நடித்த விஜய் சேதுபதிக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி என தனது நெகிழ்ச்சி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…