blue sattai maran about Samuthirakani [File Image]
இயக்குனரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் எப்போதும் பிரபலங்கள் குறித்து விமர்சித்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் ஜெயிலர் வசூலை வைத்து கடுமையாக சமீபத்தில் விமர்சித்து பதிவுகளை வெளியீட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது சமுத்திரக்கனியை விமர்சித்துள்ளார்.
இன்று காலை நடிகர் சமுத்திரக்கனி படத்தை பார்த்துவிட்டு அதனை விமர்சனம் செய்வது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம் தான். இப்போது இருக்கும் காலங்களில் செல்போன் வைத்திருப்பவர்கள் விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தரமாக படமாக இருந்தால் அது விமர்சனங்களை தாண்டி நன்றாக ஓடும். அதற்கு உதாரணம் போர்த்தொழில் திரைப்படம் ” என்று சமுத்திரக்கனி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ப்ளூ சட்டை மாறன் ” பணம் தனது படம் பார்க்கிறார்கள் எனவே, அதனால் விமர்சனம் செய்கிறார்கள். சொம்பு அடித்து பாராட்ட நீங்கள் இலவச டிக்கட்டா தருகிறீர்கள்? டீக்கடையில் வாங்கும் பத்து ரூபாய் பஜ்ஜி முதல் பல ஆயிரம் மதிப்புள்ள ஆடை வரை குறை இருந்தால் அதனை சுட்டிக்காட்டுவது என்பது நுகர்வோரின் உரிமை.
படம் சரியாகவில்லை என்றால் படம் பார்த்து நேரம் மற்றும் பணத்தை செலவழிப்பவர் விமர்சிக்காமல் என்ன செய்வார்கள்? கேமரா முன்னால் , டப்பிங் பேச வாய் இருப்பவர்கள் எல்லாம் நடிப்பு பயிற்சியே இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும்போது தன் உழைப்பில் செல்போன் வாங்கி, தனது பணத்தில் டிக்கட் எடுப்பவர். விமர்சனம் செய்தால் உங்களுக்கு என்ன?
சமூக வலைத்தளத்தில் தனித்து இயங்கி வெளிப்படையாக விமர்சனம் செய்வோர் சிலரை உங்களால் விலைக்கு வாங்கவே முடியாது என்பதால். ஆகவே, இந்த நக்கல் வெங்காயமெல்லாம் வேலைக்கு ஆகாது சார். நீங்கள் உங்கள் வேலையை உருப்படியாக பாருங்கள். மொக்கை படங்கள் தொடர்ந்து விமர்சனங்களில் கிழித்து தொங்க விடப்படும்” எனவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…