Categories: சினிமா

உதவி கேட்ட ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஆர்.ராதா!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கலக்கும் பல நடிகர்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். அவர்கள் வில்லனாக நடித்து கொண்டு வருவதால் அவர்கள் வில்லன் என்ற பிம்பமே மக்களின் மனதில் பதிந்து விடும். பின், அவர்கள் நல்ல மனம் கொண்டவர்கள் என்பதை அவர்களுடன் பணியாற்றிய பிரபலங்கள் தான் பேட்டிகளின் மூலம் மக்களுக்கு தெரிய படுத்துவார்கள்.

அப்படி தான் ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி கொண்டு இருந்த எம்.ஆர்.ராதா ரசிகர் ஒருவருக்கு செய்த உதவிய பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் வில்லனாக நடித்துக்கொண்டு இருந்தாராம். அப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர் ஒருவர் அவரை பார்க்க வந்தாராம்.

ஆனால், படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்துகொண்டு இருந்ததால் வேகமாக சென்று எம்.ஆர்.ராதாவால் நேரடியாக பேசமுடியவில்லையாம். அந்த ரசிகரும் எம்.ஆர்.ராதா தன்னை பார்க்க வருவார் தன்னிடம் எதாவது பேசுவார் என்று நீண்ட மணி நேரமாக காத்துக்கொண்டே இருந்தாராம். பிறகு படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வேகமாக அந்த ரசிகரிடம் எம்.ஆர்.ராதா பேசினாராம்.

எம்.ஜி.ஆர் தான் எனக்கு முக்கியம்! இந்தி பட வாய்ப்புகளை உதறி தள்ளிய நடிகை லதா!

அந்த ரசிகர் எம்.ஆர்.ராதாவின் காலை பிடித்துக்கொண்டு ஐயா எனக்கு எதாவது உதவி செய்யுங்கள் என்று கூறினாராம். அதற்கு எம்.ஆர்.ராதா பேசி முதலில் அந்த ரசிகரை வீட்டிற்கு போக சொல்லிவிட்டாராம். பிறகு அதற்க்கு அடுத்த நாள் அந்த ரசிகரின் வீட்டு முகவரி மற்றும் அவரை பற்றிய விஷயங்கள் அனைத்தையும் ஒருவரை விட்டு கேட்டுவிட்டு வர சொன்னாராம். பிறகு கையில் இருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்து கொடுத்தாராம்.

பணத்தை எடுத்துக்கொடுத்து இதனை அந்த நபரிடம் கொடுங்கள் என்று கொடுத்து பணம் கொடுத்து உதவி செய்தாராம். கிட்டத்தட்ட அதில் 10,000க்கும் மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஆர்.ராதா 1950 காலகட்டத்தில் தான் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தார். அந்த சமயம் 10,000 என்பது மிகவும் பெரிய தொகை ஆனால், பணத்தை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் எம்.ஆர்.ராதா அந்த சமயமே உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான ஏவிஎம் ப்ரோ தெரிவித்துள்ளார்.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

10 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago