Vijayakanth [file image]
விஜயகாந்த் : பள்ளி பருவத்தில் இருந்து விஜயகாந்த் விரும்பி சாப்பிட்டவை பற்றி அவரே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் அதிகமாக செய்த உதவிகளில் ஒன்று சாப்பாடு போட்டு மற்றவர்களின் பசியை போக்கியது தான் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல மக்களுக்கும், தன்னுடன் படங்களில் பணியாற்றிய பிரபலங்களும், தன்னுடன் பயணித்தவர்கள் என பலருக்கும் சாப்பாடு போட்டு இருக்கிறார். அப்படி பலருடைய பசியை தீர்த்த விஜயகாந்த் விரும்பி சாப்பிட்டவை பற்றி உங்களுக்கு தெரியுமா?
நம்ம கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் குழந்தை போலவே தனக்கு பிடித்த உணவுகளை பற்றி பேட்டியில் பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் பேசிய விஜயகாநத் ” எனக்கு சிறிய வயதில் இருந்தே கடலைமிட்டாய் என்றால் ரொம்பவே பிடிக்கும். அதைப்போலவே மாங்காய் என்றாலும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
நான் பள்ளிக்கூடம் படிக்கும்போதில் இருந்து இதனை விரும்பி சாப்பிட்டு வருகிறேன். இன்னும் எனக்கு மாங்காய் என்றால் ரொம்பவே பிடிக்கும். மாங்காவை வெறுமனையாக சாப்பிடுவது எனக்கு பிடிக்காது. அதனுடன் உப்பு, வத்ததூள் ஆகியவற்றை சேர்த்து வைத்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதைப்போல, அந்த சமயத்தில் விற்கப்பட்ட குச்சி ஐஸும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதைப்போல மதுரையில் விற்கப்படும் ஜிகிர்தண்டா விரும்பி குடிப்பேன்.
மதுரையில் மட்டும் இல்லை எங்கு எல்லாம் ஜிகிர்தண்டா இருக்கிறதோ அங்கு எல்லாம் நான் விரும்பி சென்று குடிப்பேன். இருந்தாலும் நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது குடித்த அளவிற்கு ஜிகிர்தண்டா இப்போது நிறைய கடைகளில் இல்லை என்பது எனக்கு ரொம்பவே வருத்தமான ஒரு விஷயம் தான்” எனவும் கேப்டன் விஜயகாந்த் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…
சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…
குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…