Categories: சினிமா

Sigappu Rojakkal : சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

Published by
பால முருகன்

இயக்குனர் இமயம் பாரதி ராஜா இயக்கத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி, வடிவுக்கரசி, பாக்யராஜ்,  ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் முதலில் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிக்கவிருந்தது நடிகர் சிவக்குமார் தானாம். முதலில் படத்தின் கதையை இயக்குனர் பாரதி ராஜா அவரிடம் கூறினாராம். கதையை கேட்டு அதிர்ந்து போன சிவகுமார் கதை நன்றாக இருக்கிறது எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருக்கிறது என இயக்குனர் பாரதிராஜாவிடம் கூறினாராம்.

பிறகு இந்த கதை நன்றாக இருக்கிறது ஆனால், நான் நடித்தால் நன்றாக இருக்காது. எனக்கு இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்காது என கூறி நிகாரித்துவிட்டாராம். பிறகு சிவக்குமார் இப்படி சொன்னதை பார்த்து பாரதி ராஜா சற்று அதிர்ச்சியாகிவிட்டாராம். இதனால் தான் சிவக்குமார் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிக்கவில்லையாம். இந்த தகவலை அவரே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார்.

சிவக்குமார் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்த நிலையில், பிறகு பாரதி ராஜா கமல்ஹாசனிடம் கதையை கூறினாராம். கமல்ஹாசனுக்கு கதை மிகவும் பிடித்துப்போக நான் நடிக்கிறேன் என சம்மதம் தெரிவித்துவிட்டு நடித்தாராம். படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகி வசூலை குவித்தது.

பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்யும் வில்லனாக நடிகர் கமல்ஹாசன் முத்து திலீப் என இரண்டு கதாபாத்திரங்களாக நடித்திருப்பார்.  அந்த சமயம் பார்க்கும்போதே படம் மிகவும் த்ரில்லராக இருக்கும். அந்த அளவிற்கு ஒரு தரமான படத்தை இயக்குனர் இமயம் பாரதி ராஜா கொடுத்திருந்தார். தமிழ் சினிமாவில் எத்தனையோ நல்ல படங்கள் இருக்கிறது அந்த பட்டியலில் இந்த படத்திற்கும் எப்போதும் இடம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Published by
பால முருகன்

Recent Posts

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

2 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

2 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

38 minutes ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

1 hour ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

18 hours ago