Categories: சினிமா

விஜயகாந்தை கொன்றவர்களை கண்டறிய வேண்டும்! பரபரப்பை கிளப்பிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்!

Published by
பால முருகன்

கேப்டன் விஜயகாந்த் இன்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருடைய இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில், பிரபல திரைப்பட இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் விஜயகாந்தை கொன்றவர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்று பதிவு வெளியீட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” இந்த பதிவு உதயநிதி அண்ணாவுக்காக. நான் கேரளாவில் இருந்து வந்து ரெட் ஜெயண்ட் அலுவலகத்தில் அவரை சந்தித்தபோது இரும்பு பெண்மணி ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோரை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அந்த வகையில் இப்போது கேப்டன் விஜயகாந்தை கொன்றது யார் என்பதை இப்போது கண்டுபிடிக்க வேண்டும்.  ஏற்கனவே இந்தியன் 2 செட்டில் ஸ்டாலினையும் கமல் சாரையும் கொல்ல முயற்சித்தார்கள். நீங்கள் இப்போது கில்லர்கள் யாரு என்று கண்டுபிடிக்கவில்லை என்றால் கொலையாளிகளின் அடுத்த இலக்கு நீங்கள் அல்லது ஸ்டாலின் சார். நெரம் ஹிட் ஆனதற்காக எனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

நீங்கள் ஐபோன் மையத்தை அழைத்து 15 நிமிடங்களில் எனக்கு ஒரு கருப்பு நிற ஐபோன் தந்தீர்கள். எனவே, உதயநிதி அண்ணா என்னை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொலையாளிகளையும் அவர்களின் நோக்கத்தையும் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிமையான விஷயமே” எனவும் உதயநிதியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இவருடைய அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் என்னுடைய சினிமா பயணத்தை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தியேட்டருக்கான என்னுடைய சினிமாவின் பயணத்தை நிறுத்திக்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன்” என்று அல்போன்ஸ் புத்திரன் கூறியிருந்தார். அந்த பதிவுக்கு பிறகு இவர் அடிக்கடி சம்பந்தம் இல்லாத வகையில் பதிவுகளை வெளியீட்டு வருகிறார். எனவே, தற்போது விஜயகாந்த் பற்றி அவர் இப்படி போட்டுள்ள பதிவை பார்த்த பலரும் உங்களுக்கு என்னாச்சு? எனவும் கொஞ்ச நேரம் சும்மா இருங்க எனவும் கூறி வருகிறார்கள்.

Alphonse Puthren [File Image]

Recent Posts

உயிரிழந்த பெண் யானை.., வயிற்றில் ஆண் குட்டி.! காக்கத் தவறியது ஏன்?

கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…

11 minutes ago

உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…

1 hour ago

விவாகரத்து வழக்கு: ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி.!

சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…

1 hour ago

MI vs DC: பிளே ஆஃப் செல்ல கேள்வி குறி? குறுக்கை வரும் மழை.., போட்டி நடக்குமா?

மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…

2 hours ago

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

10 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

10 hours ago