மணிரத்னம் மனுஷனே இல்லை! ஆதங்கத்தை கொட்டிய தயாரிப்பாளர்!

Published by
பால முருகன்

Mani Ratnam : மணிரத்னம் மனுஷனே இல்லை என பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களை பற்றி மற்ற பிரபலங்கள் பெருமையாக பேசுவது போல ஒரு சில பிரபலங்கள் விமர்சித்து பேசுவதும் உண்டு. அந்த வகையில் வேட்டையாடு விளையாடி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் முன்னணி இயக்குனரான மணிரத்தினத்தை பற்றி விமர்சித்து பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டியில் பேசிய மாணிக்கம் நாராயணன் ” இயக்குனர் மணிரத்தினத்தை பற்றி பேசவே எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 60 வயதில் அவருக்கு கொஞ்சம் கூட பக்குவம் இல்லை. அவரால் நான் நஷ்டம் அடைந்து இருக்கிறேன். பிறகு உதவிக்காக எனக்கு ஒரு படம் கொடுத்து என்னை தூக்கிவிட கேட்டு அவரை சந்திக்க சென்றால் வாட்ச்மேனை விட்டு இப்போது பார்க்க முடியாது என்று கூறிவிடுவார்.

பிறகு போன் செய்துவிட்டு இந்த படத்தை நாங்கள் ஏற்கனவே வேறொரு தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டோம் என்று கூறுவார். அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் போது எங்களுக்கு உதவுவதில் என்ன தவறு இருக்கு? என்னை பொறுத்தவரை மணிரத்தினத்திற்கு கொஞ்சம் கூட மனிதாபி மானமே இல்லை. மனுஷனே இல்லை என்று தான் சொல்வேன்.

நிறைய படங்கள் எடுத்து 50 கோடி 100 கோடி சம்பாதிக்கிறார் சம்பாதித்துவிட்டு போகட்டும் அதில் எனக்கு ஒன்றும் பொறாமை இல்லை. அதே சமயத்தில் அவர் மட்டும் சம்பாதிக்காமல் மற்றவர்களை சம்பாதிக்க வழிவிடவேண்டும். மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி எனக்கு நன்றாகவே தெரியும். அடிக்கடி நானும் அவரும் படங்களை பற்றி பேசிக்கொள்வோம்.

ஆனால், நான் அவருடைய கணவர் மணிரத்தினத்தை பற்றி பேசியதில் இருந்து எனக்கு அவர் கால் செய்யவும் இல்லை நான் கால் செய்தாலும் எடுக்கவே இல்லை. அவருக்கும் என் மீது அவருடைய கணவரை பற்றி பேசியதால் வருத்தம் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதுக்காக உண்மையை பற்றி பேசாமல் என்னால் இருக்க முடியாது” எனவும் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார். மணிரத்தினத்தை பற்றி இவர் பேசி இருப்பது சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

8 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

9 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

9 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

10 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

12 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

12 hours ago