maniratnam [File Image]
Mani Ratnam : மணிரத்னம் மனுஷனே இல்லை என பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களை பற்றி மற்ற பிரபலங்கள் பெருமையாக பேசுவது போல ஒரு சில பிரபலங்கள் விமர்சித்து பேசுவதும் உண்டு. அந்த வகையில் வேட்டையாடு விளையாடி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் முன்னணி இயக்குனரான மணிரத்தினத்தை பற்றி விமர்சித்து பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டியில் பேசிய மாணிக்கம் நாராயணன் ” இயக்குனர் மணிரத்தினத்தை பற்றி பேசவே எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 60 வயதில் அவருக்கு கொஞ்சம் கூட பக்குவம் இல்லை. அவரால் நான் நஷ்டம் அடைந்து இருக்கிறேன். பிறகு உதவிக்காக எனக்கு ஒரு படம் கொடுத்து என்னை தூக்கிவிட கேட்டு அவரை சந்திக்க சென்றால் வாட்ச்மேனை விட்டு இப்போது பார்க்க முடியாது என்று கூறிவிடுவார்.
பிறகு போன் செய்துவிட்டு இந்த படத்தை நாங்கள் ஏற்கனவே வேறொரு தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டோம் என்று கூறுவார். அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் போது எங்களுக்கு உதவுவதில் என்ன தவறு இருக்கு? என்னை பொறுத்தவரை மணிரத்தினத்திற்கு கொஞ்சம் கூட மனிதாபி மானமே இல்லை. மனுஷனே இல்லை என்று தான் சொல்வேன்.
நிறைய படங்கள் எடுத்து 50 கோடி 100 கோடி சம்பாதிக்கிறார் சம்பாதித்துவிட்டு போகட்டும் அதில் எனக்கு ஒன்றும் பொறாமை இல்லை. அதே சமயத்தில் அவர் மட்டும் சம்பாதிக்காமல் மற்றவர்களை சம்பாதிக்க வழிவிடவேண்டும். மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி எனக்கு நன்றாகவே தெரியும். அடிக்கடி நானும் அவரும் படங்களை பற்றி பேசிக்கொள்வோம்.
ஆனால், நான் அவருடைய கணவர் மணிரத்தினத்தை பற்றி பேசியதில் இருந்து எனக்கு அவர் கால் செய்யவும் இல்லை நான் கால் செய்தாலும் எடுக்கவே இல்லை. அவருக்கும் என் மீது அவருடைய கணவரை பற்றி பேசியதால் வருத்தம் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதுக்காக உண்மையை பற்றி பேசாமல் என்னால் இருக்க முடியாது” எனவும் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார். மணிரத்தினத்தை பற்றி இவர் பேசி இருப்பது சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…