rohini theatre And Vijay [file image]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வெளியானது. படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற காரணத்தால் படத்தின் ட்ரைலராவது ரசிகர்கள் பிரமாண்டமாக பார்த்து ரசிக்கவேண்டும் என பல பெரிய திரையரங்குகளில் வெளியே திரை வைத்து ட்ரைலர் காட்சிப்படுத்தப்பட்டது.
அதைப்போலவே, திரையரங்குகளுக்கு உள்ளேயும் டிரைலர் போடப்பட்டது. அந்த வகையில், டிரைலர் காண சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது என்றே கூறலாம். டிரைலரை பார்த்தது மட்டுமின்றி திரையரங்குகளில் இருந்த இருக்கைகளை எவ்வளவு சேதப்படுத்தமுடியுமோ அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் சேதப்படுத்தினார்கள்.
ஏற்கனவே லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவில்லை என்ற காரணத்தால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இதன் காரணமாக கோபத்தில் சம்மபந்தமே இல்லாமல் திரையரங்கு இருக்கைகளை சேதம் செய்த்துவிட்டு வெளியே வந்து இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை என்றால் இப்படி தான் என்பது போல சில ரசிகர்களும் பேசி இருந்தார்கள்.
விஜய் ரசிகர்கள் இப்படி திரையரங்குகளின் இருக்கைகளை சேதப்படுத்தியது குறித்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பிரபல தயாரிப்பாளரான டி.சிவா பேட்டி ஒன்றில் விஜயின் உண்மையான ரசிகர்கள் யாரும் இப்படி செய்யமாட்டார்கள் எனவும் காட்டத்துடன் பேசி இருந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விஜய்க்கு தகவல் தெரிவிக்க விஜய் இந்த சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளாராம். வேதனையுடன் ரோகினி திரையரங்கின் உரிமையாளரை நேரில் அழைத்துள்ளாராம். நேரில் அழைத்து இந்த சம்பவம் குறித்து பேசி அதற்கான தொகையை அவரும் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் இதனால் தான் விஜய்யை அனைவர்க்கும் பிடிக்கிறது என புகழந்து தள்ளி வருகிறார்கள்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…