தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் பல வெற்றி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், ாலும் கட்சியை மறைமுகமாகவும், ஒரு சில இடங்களில் நேரடியாகவும் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் தளபதி விஜயின் பேச்சு சமூக ஊடங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு வந்த விஜய் ரசிகர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்த நிலையில், போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியுள்ளனர். இதனை மற்ற நடிகர்கள் விமர்சித்து வருகிற நிலையில், விஜயின் தீவிர ரசிகரான, நடிகர் சந்தனு தனது ட்வீட்டர் பக்கத்தில் காட்டமான கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், “எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம் வந்தது என்றால், எந்த பெரிய மனிதர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், அடிமட்டத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் தவறுக்கு மேல் இடத்தில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…