இளையராஜாவை சீண்டிய வைரமுத்து! ‘கொஞ்சமாவது நன்றி இருக்கனும்’ எச்சரித்த கங்கை அமரன்!

Published by
பால முருகன்

Ilaiyaraaja : இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்த வைரமுத்துவை கங்கை அமரன் கண்டித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இடையே மன கசப்பு இருக்கிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக பழகி வந்த நிலையில், மனக்கசப்பு ஏற்பட்டதன் காரணமாக பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனையடுத்து, விழாவின் மேடை ஒன்றில் இளையராஜாவரை பற்றி மறைமுகமாக வைரமுத்தி பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கங்கை அமரன் வைரமுத்துவை எச்சரித்து பேசியுள்ளார்.

படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து ” இப்போது இசை பெரியதா? அல்லது பாடல் வரிகள் பெரியதா? என்கிற பிரச்சனை புதிதாக கிளம்பி இருக்கிறது. ஒரு பாடலை உருவாக்கும்போது அந்த படளுடைய இசை மற்றும் பாடலுடைய வரிகள் இணையும் போது நல்ல பாடல்கள் கிடைக்கிறது.

சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு, இதைப் புரிந்துகொண்டவன் ஞானி,புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்று வெளிப்படையாகவே வைரமுத்து பேசி இருந்தார். இதனை பார்த்த பலரும் இளையராஜாவை மறைமுகமாக வைத்து தான் வைரமுத்து இப்படி பேசி இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

ஏனென்றால், இளையராஜாவின் பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது நான் எல்லாரை விடவும் மேலானவன் பாடல்களில் தனது உரிமைதான் மேலானது என கூறி இருந்தார். அதனை வைத்து தான் மறைமுகமாக வைரமுத்து இப்படி பேசி இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனையடுத்து, வைரமுத்துவை கண்டித்து கங்கை அமரன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பொதுவாகவே மனிதனாக இருந்தால் கொஞ்சம் நன்றி வேண்டும். எங்களால் மேலே வந்த ஒருவர் இப்படி பேசுவது தவறு. வைரமுத்து பாடலுக்கு அதிகமான புகழ் கிடைத்துவிட்ட காரணத்தால் கர்வம் தலைக்கேரிவிட்டது. அவரை அடக்கி வைக்க ஆள் இல்லாத காரணத்தால் அவர் ரொம்பவே துள்ளிக்கொண்டு இருக்கிறார்.

வைரமுத்துவை வாழவைத்தது இளையராஜா தான். எனவே, இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் அவர் வணங்க வேண்டும். நான் வெளிப்படையாகவே அவருக்குச் ஒரு சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் இதுவரை எழுதிய பாடல்கள் அனைத்தையும் வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள் அந்த பாடல்கள் இப்படி வந்து இருக்க முடியுமா? இசையில்லாமல் பாடல்கள் என்பது இல்லவே இல்லை. இனிமேல், இளையராஜாவை பற்றி குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளைச் கண்டிப்பாக சந்திக்க வேண்டி இருக்கும்” என்று மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

2 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

2 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

4 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

4 hours ago

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…

4 hours ago

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி.!

சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

5 hours ago