sivakarthikeyan gv prakash [Image source : firstpost iop]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இருந்தும் இன்னும் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் காஷ்மீர் சென்று ராணுவ பயிற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகினது. இதற்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் ஆளவந்தான் திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடிப்பதற்காக ராணுவ பயிற்சிக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஷ்வின் இயக்கும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…