சினிமா

நான் மெட்ராஸில் வளர்ந்தவன் எனக்கு சாதியெல்லாம் தெரியாது! நடிகர் கார்த்தி பேச்சு!

Published by
பால முருகன்

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி மெட்ராஸ் படம் குறித்தும் ஜப்பான் படம் குறித்தும் பேசினார். மெட்ராஸ் படம் குறித்து அவர் பேசியதாவது ” பா .ரஞ்சித் இயக்கத்தில் நான் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்ததற்கு காரணம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், படம் ஒரே ஒரு பெரிய சுவரை வைத்து அரசியல் பேசப்பட்டு இருக்கும். கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதனால்தான் இந்த திரைப்படத்தில் நடித்தேன்.

முதலில் கைதி 2 அப்புறம் தான் ரோலக்ஸ்! ‘ஜப்பான்’ விழாவில் அப்டேட் விட்ட லோகேஷ் கனகராஜ்!

எனக்கு சாதியெல்லாம் தெரியாது அதற்கு காரணம் நான் மெட்ராஸில் வளர்ந்தேன். மெட்ராஸில் வளர்ந்தவர்களுக்குச் சாதியெல்லாம் தெரியாது. அங்கு இருப்பவர்களில் யாரிடம் பழகினாலும் அவருடைய பெயரை மட்டும் தான் கேட்போம். அதனை தாண்டி சாதி பற்றி எல்லாம் பேசவே மாட்டோம்” என கூறினார்.

அதனை தொடர்ந்து ஜப்பான் படத்தை பற்றி கார்த்தி பேசுகையில் ” ஜப்பான் படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கும் மிகவும் பிடித்தது. இதற்கு முன்பு ராஜு முருகன் இயக்கிய கூக்கு படம் எனக்கு மிகவும் பிடித்தது. இதுவரை எந்த இயக்குனரையும் அழைத்து எனக்கு ஒரு கதை சொல்லுங்கள் என்று கேட்டது இல்லை முதல் முறையாக ராஜு முருகன் அழைத்து தான் கதை கேட்டேன்.

அந்த விஷயத்தை கார்த்தி தான் எனக்கு கற்று கொடுத்தார்! மனம் திறந்த தமன்னா!

அவரும் எனக்கு சில கதைகளை சொன்னார். அதில் ஜப்பான் படத்தின் கதை கேட்கவே மிகவும் வித்தியாசமாக நன்றாக இருந்தது. இதன் காரணமாக தான் ஜப்பான் திரைப்படத்தில் நடித்தேன்” எனவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளர். மேலும் ஜப்பான் படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

36 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

49 minutes ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

3 hours ago