karthi speech [File Image]
நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி மெட்ராஸ் படம் குறித்தும் ஜப்பான் படம் குறித்தும் பேசினார். மெட்ராஸ் படம் குறித்து அவர் பேசியதாவது ” பா .ரஞ்சித் இயக்கத்தில் நான் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்ததற்கு காரணம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், படம் ஒரே ஒரு பெரிய சுவரை வைத்து அரசியல் பேசப்பட்டு இருக்கும். கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதனால்தான் இந்த திரைப்படத்தில் நடித்தேன்.
முதலில் கைதி 2 அப்புறம் தான் ரோலக்ஸ்! ‘ஜப்பான்’ விழாவில் அப்டேட் விட்ட லோகேஷ் கனகராஜ்!
எனக்கு சாதியெல்லாம் தெரியாது அதற்கு காரணம் நான் மெட்ராஸில் வளர்ந்தேன். மெட்ராஸில் வளர்ந்தவர்களுக்குச் சாதியெல்லாம் தெரியாது. அங்கு இருப்பவர்களில் யாரிடம் பழகினாலும் அவருடைய பெயரை மட்டும் தான் கேட்போம். அதனை தாண்டி சாதி பற்றி எல்லாம் பேசவே மாட்டோம்” என கூறினார்.
அதனை தொடர்ந்து ஜப்பான் படத்தை பற்றி கார்த்தி பேசுகையில் ” ஜப்பான் படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கும் மிகவும் பிடித்தது. இதற்கு முன்பு ராஜு முருகன் இயக்கிய கூக்கு படம் எனக்கு மிகவும் பிடித்தது. இதுவரை எந்த இயக்குனரையும் அழைத்து எனக்கு ஒரு கதை சொல்லுங்கள் என்று கேட்டது இல்லை முதல் முறையாக ராஜு முருகன் அழைத்து தான் கதை கேட்டேன்.
அந்த விஷயத்தை கார்த்தி தான் எனக்கு கற்று கொடுத்தார்! மனம் திறந்த தமன்னா!
அவரும் எனக்கு சில கதைகளை சொன்னார். அதில் ஜப்பான் படத்தின் கதை கேட்கவே மிகவும் வித்தியாசமாக நன்றாக இருந்தது. இதன் காரணமாக தான் ஜப்பான் திரைப்படத்தில் நடித்தேன்” எனவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளர். மேலும் ஜப்பான் படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…