rambha [File Image]
நடிகை ரம்பா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘உழவன்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுந்தர புருஷன், சிவசக்தி,தர்ம சக்கரம், ராசி, அடிமை சங்கிலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். 90 காலகட்டத்தில் எல்லாம் நடிகை ரம்பாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்று கூட கூறலாம்.
குறிப்பாக அந்த காலகட்டத்தில் இவர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்ததால் இவரை ” தொடை அழகி” என ரசிகர்கள் பெயர் கொடுத்தனர். தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த ரம்பா திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து தற்காலிமாக விலகினார் என்றே கூறலாம்.
கடந்த 2010-ஆம் ஆண்டு தான் நடிகை ரம்பா இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்னதாக அவர் கடைசியாக நடித்த திரைப்படம் என்றால், பென் சிங்கம் தான். இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிதாக எந்த திரைப்படத்திலும் அவர் நடிக்கவே இல்லை அவர் மீண்டும் ஒரு படத்திலாவது நடிப்பாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
அந்த வகையில் நடிகை ரம்பா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் ரீ-எண்டரி கொடுக்கவுள்ளாராம். இதனை அவரே பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார். சினிமாவில் மீண்டும் வருவது குறித்து பேசிய நடிகை ரம்பா ” சினிமாவில் நான் பல ஆண்டுகள் நடிக்காமல் இருக்கலாம் ஆனால், சினிமாவை கவனிக்காமல் எல்லாம் இல்லை.
தொடர்ந்து நான் சினிமாவை கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். இப்போது சினிமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. எனவே, என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். எனவே என்னுடைய ரசிகர்கள் என்னை விரைவில் மீண்டும் திரையில் பார்க்கலாம்” என கூறியுள்ளார். மீண்டும் ரம்பா சினிமாவில் நடிக்க வந்துள்ள தகவல் அவருடைய ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…