Vijay Devarakonda [File Image]
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குஷி’ படத்தின் வெற்றியில் மூழ்கி இருக்கிறார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இது அவரது முதல் வெற்றியாகும், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் முழு காதல் திரைப்படமாக உருவாகியுள்ள ‘குஷி’ படம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி வெளியாகி உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில், நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் நடந்த குஷி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தின் அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, பேசிய விஜய் தேவரகொண்டா, தனது சம்பளத்தில் இருந்து 100 ஏழை குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்தார். அதாவது, 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்வதாக கூறினார்.
இது குறித்து அவர் பேசுகையில், “நான் சந்தோஷமா இருக்கேன், நான் எதையாவது செய்ய யோசிக்கிறேன், அது சரியா தவறா என்று தெரியவில்லை. எனது ‘குஷி’திரைப்பட சம்பளத்தில் இருந்து ரூ.1 கோடியை 100 குடும்பங்களுக்கு வழங்குகிறேன். தேவைப்படும் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அடுத்த 10 நாட்களில் தலா ரூ.1 லட்சம் காசோலையாக வழங்குவேன்” என்றார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…