மற்றவர்களை கவனிப்பது என்னோட வேலை இல்லை! விமர்சனங்கள் குறித்து இளையராஜா!

Published by
பால முருகன்

சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக கூறி வழக்கு தொடர்ந்தபோதும், ரஜினியின் கூலி டீசரில் வரும் இசையையும் தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பியதால் சிலர் இளையராஜாவை விமர்சித்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய இளையராஜா ” நான் தினமும் கேள்வி படுகிறேன். என்னை பற்றி எதோ ஒரு வகையில், இது மாதிரியான வீடியோக்கள் நிறைய வீடியோ வந்துகிட்டு இருக்கு என்ற செய்தியை வேண்டியவர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.

ஆனால், நான் இதில் எல்லாம் கவனம் செலுத்துவதே இல்லை. ஏனென்றால் மற்றவர்களை கவனிக்கவேண்டியது என்னுடைய வேலை இல்லை. என்னுடைய வேலையை கவனிக்கிறது தான் என்னுடைய வேலை. நான் என்னுடைய வேலையில் ரொம்ப சுத்தமாக போய்க்கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்தி கொண்டு இருக்கின்ற நேரத்திலே, கடந்த ஒரு மாதத்தில் சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன்.

இடையில் சில நிகழ்ச்சிகளில் தலைகாட்டி விட்டு வந்தாலும் 35 நாட்களில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன். முழுவதுமாக 4 மூவ்மென்ட்ஸ் உள்ள சிம்பொனியை முடித்துவிட்டேன். இந்த சந்தோஷமான செய்தியை என்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

3 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

3 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

4 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

4 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

5 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 hours ago