leo vijay meesai rajendran [file image]
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதமேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருக்கும் லியோ திரைப்படம் இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படம் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது . அந்த திரைப்படத்தின் வசூல் சாதனையை ஆயிரம் கோடி வசூல் செய்து லியோ திரைப்படம் கண்டிப்பாக முறியடிக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்தாள் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன் என்று கூறியிருந்தார். அதனை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் மீசையை எடுக்க தயாராக இருங்கள் என கூறி வந்தனர். அவர் பேசிய வீடியோவும் மிகவும் வைரலானதால் விஜய் ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்தனர்.
இதனையடுத்து அப்படியே, அந்தர் பல்டி அடிக்கும் வகையில், மீசை ராஜேந்திரன் ஜெயிலர் படத்தின் வசூல் மற்றும் 2.0 வசூல், சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை என அனைத்தையும் முறியடிக்கட்டும் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன் என பேசியுள்ளார். லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் பயம் வந்துவிட்டதோ என மீசை ராஜேந்திரன் பேசியதை வைத்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…