சினிமா

எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கணும்! ஓப்பனாக பேசிய நடிகர் ஜெய்!

Published by
பால முருகன்

நடிகர் ஜெய் தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லேபிள் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஜெய் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜெய் தனக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என்பது குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” எனக்கு படங்களில் போர் வீரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். ராஜமௌலியின் மகதீராவின் (மாவீரன்)  ஃப்ளாஷ்பேக் பகுதியை நான் மிகவும் விரும்பினேன். அதைப் பார்த்ததில் இருந்தே எனக்கு அப்படியொரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று பலமுறை யோசித்து பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி கதைகள் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வருமா என்றும் நான் ஆவலுடன் இருக்கிறேன். அந்த மாதிரி கதைகள் கொண்ட படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது என்றால் கண்டிப்பாகவே நடிப்பேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் ஜெய் ” நயன்தாராவுடன் நடிக்கும் அனுபவம் குறித்து பேசியுள்ளார். நான் நயன்தாராவுடன் அன்னபூரணி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறேன். இந்த திரைப்படம் முற்றிலும்  பெண்ணை மையப்படுத்திய படமாக இருக்கும். படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்படும்’என கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் ஜெய் ” காமெடி, எமோஷன் மற்றும் ஆக்ஷன் போன்ற நடிப்பின் பல்வேறு அம்சங்களுக்கு எனது முழுத் திறனையும் வழங்க விரும்புகிறேன். இன்றுவரை நான் பல படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால்,  எனது எந்த திரைப்படத்திலும்  நான் முழுமையாக நன்றாக நடித்து இருக்கிறேன் என திருப்தி அடையவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்
Tags: #Jai#Label

Recent Posts

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

29 minutes ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

2 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

2 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

3 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

4 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago