உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Published by
பால முருகன்

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலருடைய வாழ்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அரசியலில் ஆந்திரா முதலமைச்சார்  ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்கை வரலாற்று படமும் எடுக்கப்பட்டது ‘யாத்ரா 2’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதில் ஜீவா நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடைய வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு போலீஸ் அதிகாரியாக இருந்தார். எனவே, அவர் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறினார். அதன்பிறகு எப்படி அரசியலுக்குள் நுழைந்தார். அரசியலுக்கு நுழைந்து அவர் செய்த விஷயங்கள் அனைத்தையும் அவருடைய வாழ்கை வரலாற்று படத்தில் மக்களுக்கு காட்ட திட்டமிட்டுள்ளதாம்.

அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தை எல்லாம் நடைபெற்று வந்த நிலையில், விஷால் கிட்டத்தட்ட படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். இந்த படத்தை பெரிய தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கவும் இருக்கிறதாம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் அரசியலுக்கு வருவது உறுதி மற்றவர்களை போல இப்போது வருகிறேன் அப்போது வருகிறேன் என்று சொல்லமாட்டேன். கண்டிப்பாக வரும் 2026-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்று கூறி இருந்தார். இந்த சூழலில் அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசும்பொருளாகியுள்ளது.

விஷால் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தின் மிகப்பெரிய வெற்றியி தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் விமர்சனங்களையும், வசூலையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago