kangana ranaut [File Image]
நடிகை கங்கனா ரனாவத் 36 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கூட கங்கனாவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கங்கனா சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒவ்வொரு பெண்ணும் தனது திருமணம் மற்றும் ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அப்படி தான் நானும் ஆசைப்படுகிறேன். நான் ஒரு குடும்பமாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.
நான் திருமணம் செய்து குடும்பம் நடத்த விரும்புகிறேன், எனக்கு என்று தனி குடும்பம் என்று ஒன்று கண்டிப்பாக வேண்டும். அதற்காக நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். என்னுடைய திருமணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு நான் ஒருவரை காதல் செய்து திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும். என்னுடைய விருப்பமும் அது தான்.
படப்பிடிப்பு கேரவனை சொந்த வீடு போல் மாற்றிய கங்கனா ரனாவத்.! எவ்வளவு விலைக்கு தெரியுமா..?
நான் திருமணம் செய்துகொள்வதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்” எனவும் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் திட்டமிட்டு இருக்கிறேன்” எனவும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும். நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 படத்தை தொடர்ந்து மேவாரா இயக்கத்தில் உருவாகி வரும் “தேஜாஸ்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும், எமர்ஜென்சி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…