சினிமா

எனக்கு காதல் திருமணமா இருந்தா சூப்பரா இருக்கும்! மனம் திறந்த நடிகை கங்கனா ரனாவத்!

Published by
பால முருகன்

நடிகை கங்கனா ரனாவத் 36 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கூட கங்கனாவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கங்கனா சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒவ்வொரு பெண்ணும் தனது திருமணம் மற்றும் ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அப்படி தான் நானும் ஆசைப்படுகிறேன்.  நான் ஒரு குடும்பமாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

நான் திருமணம் செய்து குடும்பம் நடத்த விரும்புகிறேன், எனக்கு என்று தனி குடும்பம் என்று ஒன்று கண்டிப்பாக வேண்டும்.  அதற்காக நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். என்னுடைய திருமணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு நான் ஒருவரை காதல் செய்து திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும். என்னுடைய விருப்பமும் அது தான்.

படப்பிடிப்பு கேரவனை சொந்த வீடு போல் மாற்றிய கங்கனா ரனாவத்.! எவ்வளவு விலைக்கு தெரியுமா..?

நான் திருமணம் செய்துகொள்வதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்” எனவும் கங்கனா ரனாவத்  தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் திட்டமிட்டு இருக்கிறேன்” எனவும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும். நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 படத்தை தொடர்ந்து மேவாரா இயக்கத்தில் உருவாகி வரும் “தேஜாஸ்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும், எமர்ஜென்சி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

8 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

9 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

9 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

10 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

10 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

11 hours ago