முக்கியச் செய்திகள்

Jailer : கடைசி நேரத்தில் ஜெயிலர் படத்தை தட்டி தூக்கிய ஓடிடி நிறுவனம்! எத்தனை கோடிகளுக்கு தெரியுமா?

Published by
பால முருகன்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் வெளியாகி 1 மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூல் ரீதியாகவும் படம் அணைத்து இடங்களிலும் பல சாதனைகளை படைத்தது வருகிறது.

படம் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் 530 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் இருக்கும் ரசிகர்கள் ஓடிடியில் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது படம் ஓடிடியில் வெளியாகும் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜெயிலர் திரைப்படம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில்  வெளியாகவுள்ளது. எப்போதும் வழக்கமாக சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றும். ஆனால், இந்த முறை அமேசான் பிரேம் ஜெயிலர் படத்தை கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே, ஜெயிலர் படத்தை 100 கோடி கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதனை விட அதிக தொகை கொடுத்து அதாவது 120 கோடி வரை கொடுத்து படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ ஒரு வழியாக ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும், இந்த ஜெயிலர் திரைப்படத்தில்  சிவராஜ்குமார், மிர்னா மேனன், தமன்னா, மோகன்லால், வசந்த் ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

8 hours ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

9 hours ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

9 hours ago

எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…

10 hours ago

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதி – சிபிசிஐடி.!

நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…

10 hours ago

‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?

லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…

11 hours ago