JayamRavi new movie [Image Source : Twitter/@Abishek37903715]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இறைவன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையில், ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதுப்படத்திற்கான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால், ஜெயம் ரவியின் 33-வது படத்தை இயக்குனரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தான் இயக்கவுள்ளதாகவும், படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அல்லது எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் கதையை கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவியிடம் கூறிவிட்டாராம். அந்த கதையும் அவருக்கு பிடித்துப்போக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். மேலும், இந்த திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இந்த கூட்டணி இணைவது உறுதியானால் விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிருத்திகா உதயநிதி இதற்கு முன்பு வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…