Categories: சினிமா

தம்பியை நம்புனா வேலைக்கு ஆகாது! ஜெயம் ரவிக்கு போட்டியாக இறங்கிய மோகன் ராஜா!

Published by
பால முருகன்

நடிகர் ஜெயம் ரவி தற்போது சைரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரதர், தக்லைஃப், தனி ஒருவன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தொடர்ச்சியாக இவர் பல படங்களில் நடித்து வரும் நிலையில், எப்போது தான் தனி ஒருவன் 2-வில் நடிப்பார் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

எனவே, இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது. இதனையடுத்து, தற்போது தனிஒருவன் 2 படத்திற்கு கால்ஷீட் கொடுக்கும் நோக்கத்தில் இல்லயாம். அடுத்த ஆண்டு தனி ஒருவன் 2 படத்திற்கான கால்ஷீட் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அது மட்டுமின்றி மோகன் ராஜா ஏற்கனவே எம்.குமரன் சன் ஆப்  மகாலட்சுமி 2 எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்து இருந்தார்.

இந்த இரண்டு படங்களில் ஜெயம் ரவியை நம்பி கமிட் செய்து வைத்திருக்கும் மோகன் ராஜா தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், ஜெயம் ரவி இன்னும் கால்ஷீட் கொடுக்காத காரணத்தால் மோகன் ராஜாவும் நடிப்பில் இறங்கவுள்ளாராம். அதன்படி, அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவுக்கு அண்ணனாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!

இவர் இந்த படத்திற்கு முன்பு என்ன சத்தம் இந்த நேரம், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில்  முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது சாந்தனு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் அவருக்கு அண்ணனாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.

தன்னுடைய தம்பி ஜெயம் ரவி தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருவதன் காரணமாக தனி ஒருவன் 2 படம் எடுக்க சற்று தாமதமாகும் என்பதால்  அவர் படங்களில் நடித்து முடித்து வருவதற்குள் நாமும் ஒரு படத்தில் நடித்து முடித்து விடலாம் என மோகன் ராஜா நடிப்பில் இறங்கி உள்ளாராம். விரைவில் அவர் நடிக்கவுள்ள படத்தின் மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

6 hours ago