பிளாப் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி! கம்பேக் கொடுக்க வேண்டிய நேரத்துல இப்படியா?

Published by
பால முருகன்

ஜெயம் ரவி : எதற்கும் துணிந்தவன் படம் சரியாக போகாத நிலையில், இயக்குனர் பாண்டிராஜுக்கு ஜெயம் ரவி அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது பழைய படி ஹிட் படங்களை கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனென்றால், அவர் கடைசியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் போகவில்லை. குறிப்பாக அகிலன், இறைவன், சைரன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது.

இந்த சூழலில் அவர் தோல்வி படத்தை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ் உடன் தனது அடுத்த படத்தில் இணையவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடைசியாக இயக்குனர் பாண்டிராஜ்  சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் 75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், வசூல் ரீதியாக படம் 56 கோடி வரை வசூல் செய்த காரணத்தால் படம் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜ் எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார். இதனையடுத்து, சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை பாண்டிராஜ்  சந்தித்து கிராமத்து கதையம்சம் கொண்ட ஒரு ரூலர் ஆன கதையை கூறினாராம். அந்த கதையும் ஜெயம்ரவிக்கு ரொம்பவே பிடித்து போக உடனடியாக பண்ணலாம் என்று ஜெயம் ரவி கூறிவிட்டாராம்.

தற்போது நடிகர் ஜெயம் ரவி ஜீனி, பிரதர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வரும் ஜூலை மாதத்திற்குள் இந்த படங்களில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் முதல் வாரத்தில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிராஜுடன் ஜெயம் ரவி இணையவுள்ளதாக வெளியான தகவலை பார்த்த நெட்டிசன்கள் கம்பேக் கொடுக்க வேண்டிய நேரத்துல இப்படியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

24 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

6 hours ago