K. R. Vijaya [File Image]
தமிழ் சினிமாவில் “கற்பகம்” எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கே.ஆர்.விஜயா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவள் சுமங்கலிதான், எதிரொலி, தங்கை, நெஞ்சிருக்கும் வரை, தங்கப்பதக்கம், கந்தன் கருணை உள்ளிட்ட பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுடன் ஜோடியாக இவர் நடித்துள்ளார்.
1960, 70, 80 ஆகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் கொண்டிருந்த இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்துகொண்டு இருக்கிறார். முன்னணி நடிகையாக வளரும் போது அதாவது கடந்த 1966-ஆம் சினிமா பைனான்சியர் வேலாயுத நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அந்த ஒரு காட்சியால் சினிமா தேவையானு அழுதேன்! ‘வீர திருமகன்’ படத்தால் நொந்துபோன சச்சு!
திருமணத்திற்க்கு பிறகும் சினிமாவை விட்டு விலகாமல் நடிகை கே.ஆர்.விஜயா நடித்து வந்தார். பிறகு பட வாய்ப்புகள் குறைந்தவுடன் படங்களை தயாரிக்க தொடங்கினாராம். தனது கணவர் சினிமா பைனான்சியர் என்ற காரணத்தால் சம்பாதித்த பணத்தை படம் தயாரித்து அதில் வரும் லாபங்களை வைத்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்கலாம் என திட்டமிட்டுருந்தாராம்.
திட்டமிட்ட படி தொடர்ச்சியாக அவர் படங்களை தயாரிக்கவும் செய்தார். இதில் தொடர்ச்சியாக அவர் தயாரித்த 6 திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றதாம். இதன் மூலம் நல்ல லாபமும் கிடைத்ததாம். பிறகு 7-வாதாக அவர் தயாரித்த படம் சரியான வெற்றியை பெறவில்லையாம். இதனால் அந்த சமயம் கே.ஆர்.விஜயா மிகவும் வருத்தத்தில் இருந்தாராம்.
சரியில்லனா கிளம்பிவிடுவார்..ராதிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி பட்டவரா?
கடைசியாக தயாரித்த அந்த ஒரு திரைப்படத்தின் தோல்வி காரணமாக கே.ஆர்.விஜயா தனது தயாரிப்பு கம்பெனியை இழுத்து மூடிவிட்டாராம். இந்த தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை கே.ஆர்.விஜயா கடைசியாக இந்த ஆண்டு வெளியான “ராயர் பரம்பரை” திரைபடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…