gv prakash [File Image]
கத்தாரில் பணிபுரிந்து வந்த 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நிலையில், இது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வளைத்தபக்கத்தில் இந்திய அரசுக்கு துணை நிற்போம் என பதிவிட்டுள்ளார்.
கத்தாரில் உள்ள ‘தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டென்சி சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தில், இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த வருடம், கத்தார் அரசு இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து, இந்த 8 அதிகாரிகளுக்கும் கத்தார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கத்தார் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாகவும், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளதாகவும், தண்டனை விதிக்கப்பட்டவர்களை மீட்பது தொடர்பாக சட்டப்பூர்வமாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது X தள பக்கத்தில், “நமக்காக இரவு பகல் பாராது உழைத்த நமது கடற்படை வீரர்கள் 8 பேரையும், தாயகத்திற்கு பத்திரமாக மீட்டுக்கொண்டு வர வேண்டும். அதற்காக நம் இந்திய அரசு எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் துணை நிற்போம், ஒற்றுமையுடன் போராடி நம் வீரர்களை மீட்போம் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…