PradeepAntony [file image]
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். ஏனென்றால், நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தில் பயங்கரமாக சண்டைகள் வாக்கு வாதம் நடைபெறும். ஆனால், இந்த 7-வது சீசனில் அடிக்கடி சண்டை நடக்காமல் அவ்வபோது சண்டைகள் நடைபெற்று வருகிறது.
இதில் பலமுறை பல போட்டியாளர்களிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொள்வது பிரதீப் தான். குறிப்பாக நேற்று நிக்சன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்கும் முன்னதாக விசித்ராவிடம் விளையாடி அவரிடமும் வாங்கிக்கட்டி கொண்டார். இந்த நிலையில், இவர்களை தொடர்ந்து அடுத்தாக பிரதீப் ரவீனாவை டார்கெட் செய்துள்ளார்.
ரவீனா வெளிய அமர்ந்துகொண்டிருந்த போது அவரை நோக்கி மணி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பார்த்த பிரதீப் என்னடா லவ் கன்டென்ட் எல்லாம் கொடுக்குறீங்களா? கேள்வி பட்டேன் என கேட்டார். அதற்க்கு மணி நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூற அதற்கு பிரதீப் அப்போ இப்போது ப்ரண்ட்ஷிப் கன்டென்ட் கொடுக்குறீங்களா என கேட்டுள்ளார்.
பிறகு லவ் பண்ணுங்க டா பார்ப்போம் வித்தியாசமாகி இருக்கும் என பிரதீப் கூறினார். இதனால் சற்று அதிர்ச்சியான மணி திரும்பி பார்த்தார் பிறகு அப்படியே பிரதீப் பேச்சை மாற்றினார். இதனை கண்ட விசித்ரா தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசாதா பிரச்சனை ஆகிடும் என்று கூறினார். பிறகு மணி ரவீனாவிடம் சாரி என்னால தான் சாரி மன்னிச்சுரு என்று கேட்கிறார்.
இருந்து பிரதீப் விடாமல் ரவீனாவை மணியை வைத்து கலாய்த்த காரணத்தால் சற்று வேதனை அடைந்தார். ஒரு கட்டத்தில் கண் கலங்க ரவீனாவுக்கு மணி ஆறுதலை தெரிவித்துவிட்டு சென்றார். பிறகு ரவீனா எந்த பிரச்சனையும் இல்லை மணியை நான் சும்மா தான் கட்டிப்பிச்சேன் நாளைக்கு நீயும் வா மச்சான் உன்னையும் கட்டிபுடிக்கிறேன் என ரவீனா கூற இப்போவே வா என்று கூற பிரதீப் கூறினார்.
பிறகு ரவீனா வீட்டிற்குள் சென்றுவிட்டார் பிரதீப் விசித்ராவிடம் இது சும்மா ஜாலிக்காக பேசினேன் ஜாலியாக மாற்றவில்லை என்றால் சீரியஸ் ஆகிரும் என்று கூறினார். அதற்க்கு விசித்ரா ஜாலிக்கு என்றாலும் இப்படி செய்யக்கூடாது என கூறினார். தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு எரிச்சல் ஊட்டும் விதமாக பிரதீப் செய்துவருவதால் அவரை சமூக வலைத்தளங்களில் தீட்டி தீர்த்து வருகிறார்கள்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…