தங்கலான் படத்துக்காக படாத பாடுபட்ட மாளவிகா மோகனன்! கேட்டாலே கண்ணீர் வருது!

Published by
பால முருகன்

தங்கலான் : பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் மிகவும் கடினமாக உழைத்துள்ளார் என்றே சொல்லலாம். எனவே, கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்பட்டு அவருக்கு வெற்றிப்படமாக அமையவேண்டும் எனவும் அவருடைய ரசிகர்கள் அவரும் காத்திருக்கிறார்கள்.

விக்ரம் போலவே இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனனும்  தங்கலான் படத்தின் வெற்றிக்காக தான் காத்திருக்கிறார். ஏனென்றால், மாளவிகா மோகனன் சில படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானதை விட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டதன் காரணமாக தான் பிரபலமானார் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் இன்னுமே இருந்து வருகிறது.

அந்த பேச்சுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில்  தங்கலான் படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து தனக்கு நன்றாக நடிக்க தெரியும் என காட்டுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்ததற்காக மாளவிகா மோகனன் சிலம்பம் கத்துக்கொண்டு நடித்தார்.

இதுமட்டுமின்றி இந்த படத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படத்திற்காக ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறாராம். முதலில் லுக் வைத்து பார்க்கையில், தங்கலான் படத்தில் ஆர்த்தி கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என பா.ரஞ்சித் தேர்வு செய்துவிட்டாராம். ஆனாலும், லுக் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கிறது.

இருப்பினும், படத்தில் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடிப்பாரா? என்ற யோசனையும் இருந்ததாம். முதலில் மாளவிகா மோகனன் சென்ற முதல் நாளே பெரிய ஸ்டண்ட் காட்சி ஒன்று தான் எடுக்கப்பட்டதாம். முதலில் மாளவிகா மோகனனால் அந்த காட்சியில் நடிக்கவே முடியவில்லையாம். தொடர்ச்சியாக அந்த நாள் முழுவதும் காட்சி எடுக்கப்பட்டு கொண்டு இருந்ததாம்.

சிலம்பம் சுத்தும் காட்சி எல்லாம் சரியாக வரவில்லை என்பதால் தொடர்ச்சியாகவே அந்த காட்சியில் மாளவிகா மோகனன் நடித்தாராம். தொடர்ச்சியாக அப்படி நடித்த காரணத்தால் அவருடைய கை மிகவும் பெரிதாக வீங்கி விட்டதாம். இதனால் முடியவில்லை என மாளவிகா மோகனன் கண் கலங்கி அழுதாராம். இருப்பினும் காட்சியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ச்சியாக நடித்து கொடுத்தாராம். இந்த தகவலை இயக்குனர் பா.ரஞ்சித் ‘தங்கலான் படத்திற்காக மாளவிகா மோகனனை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்’ என யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

1 hour ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

1 hour ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

3 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago