Categories: சினிமா

நடிகர் மனோபாலாவின் உடலுக்கு நாளை இறுதி சடங்கு.!

Published by
கெளதம்

மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் உடலுக்கு நாளை இறுதி சடங்கு.

நடிகரும், இயக்குனருமான மனோபாலா, கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனோபாலா, இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.  

இந்நிலையில், மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணிக்கு, வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது என்று மனோபாலாவின் மகன் ஹரிஷ் பேட்டியளித்துள்ளார். 

மனோபாலா திரைப்பயணம்:

மனோபாலா சினிமாவிற்கு வந்த போது, இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர், 1979-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நடித்திருந்தார்.

ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான மனோபாலா ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைப்பறவை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். படங்களை இயக்கியது மட்டுமின்றி, சமுத்திரம், ரமணா, பிதாமகன், காக்கி சட்டை, மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சினிமாத்துறையில் 48 ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர் ‘The Lion King’ என்ற படத்தின் தமிழ் பதிப்பிற்கு டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago