Categories: சினிமா

மன்சூர் அலிகான் வழக்கு: சரமாரி கேள்விகளை முன்வைத்த நீதிமன்றம்.!

Published by
கெளதம்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சமீபத்தில், மன்சூர் அலி கான் யூடியூப் பேட்டியின் போது நடிகை த்ரிஷாவை அவமதிக்கும் வகையில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவானது.

நடிகை த்ரிஷா இது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார். தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக, சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது.

இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். திரிஷா குறித்து அவதூறு பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இருந்தும், நடிகை த்ரிஷாவும் இது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேரில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என கூறி திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் தலா 1 கோடி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.

ஹிட் படத்தில் நடிக்க சம்பளம் வாங்காத விஜயகாந்த்! எந்த படத்துக்காக தெரியுமா?

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்குமார் தலைமையிலானா அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், பொதுவெளியில்  பிரபல நடிகையைப் பற்றி மன்சூர் அலிகானின் தரக்குறைவான கருத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரிய வேண்டும் என்றார். அது மட்டும் இல்லாமல், நியாபடி பார்த்தால் மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக சர்ச்சை செயல்களில் ஈடுபடுகிறார் என்று சுற்றி காட்பட்டது.

இதனையடுத்து, தாம் பேசியது தொடர்பாக முழு வீடியோவையும் தாக்கல் செய்வதாகவும், தம்மை பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை த்ரிஷா நீக்க வேண்டும் என மன்சூர் அலிகான் தரப்பு வாதம் முன் வைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட திரிஷாவே அமைதியாக உள்ள நிலையில் தற்போது எதற்காக மன்சூர் வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரியவில்லை என திரிஷா தரப்பு தங்கள் வாதத்தை முன் வைத்தனர். இந்நிலையில், மன்சூர் அலிகான் மனு குறித்து நடிகைகள் த்ரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

12 minutes ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

1 hour ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

3 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

4 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

5 hours ago