சினிமா

அனுஷ்காவை கல்யாணம் பண்ணிக்கோ! அந்த நடிகரை வற்புறுத்தும் குடும்பம்?

Published by
பால முருகன்

நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா இருவரும் பாகுபலி படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் அற்புதமாக இருந்திருக்கும். இந்த படத்தை பார்த்த பலரும் இருவரும் நிஜமாகவே ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்கும் எனவும் ரசிகர்கள் ஆசைப்பட்டது உண்டு. ரசிகர்கள் ஆசைப்பட்டது போலவே இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் அந்த சமயமே மிகவும் தகவல் பரவியது.

ஆனால், இவருமே தங்கள் இருவரும் காதலிக்கும் செய்திகள் குறித்து பேசவே இல்லை. இந்த நிலையில், அடிக்கடி அனுஷ்கா திருமணம் குறித்த தகவலும், பிரபாஸ் திருமணம் குறித்த தகவலும் பரவி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது ஒரு செய்தி மிகவும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், பிரபாஸ் குடும்பம் அவரை அனுஷ்காவை திருமணம் செய்ய கூறி வற்புறுத்தி வருகிறதாம்.

ரீ -என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.! புது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

பிரபாஸிற்கு வயதும் ஆகி கொண்டே இருக்கும் காரணத்தால் அவர் அனுஷ்காவை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனால் நன்றாக இருக்கும் என பிரபாஸின் குடும்பம் விரும்புகிறதாம். இதனால் விரைவில் பிரபாஸிற்கு திருமணம் செய்து வைக்கவும் அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இருப்பினும் இது வதந்தி தகவலா அல்லது உண்மை தகவலா என பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் மனம் திறந்து பதில் அளித்தால் தான் தெரியவரும். இருப்பினும் பெரிய அளவில் வதந்தி தகவலுக்கு எல்லாம் அனுஷ்கா பதில் அளித்து இல்லை இருந்தாலும் அவருடைய திருமணம் பற்றிய தகவல் இப்படி பரவி வருவதன் காரணமாக அவரும் இது பற்றி விளக்கம் அளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகை அனுஷ்கா தற்போது மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதைப்போல பிரபாஸ் தற்போது சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய அளவில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

1 hour ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago